SportsTamil News

ஐபிஎல் 2024: வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!

அகமதாபாத், மே 22: ஐபிஎல் 2024 தொடரின் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த எலிமினேட்டர் போட்டி இன்று அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெங்களூரு அணியும் ராஜஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழந்து 172 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, விராட் கோலி 33 ரன்கள், ரஜத் படிதார் 34 ரன்கள், மஹிபால் லோமரோர் 32 ரன்களுடன் விளங்கினார்கள். ராஜஸ்தான் அணியில் ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளும், ட்ரெண்ட் போல்ட், சந்தீப் சர்மா, சாஹல் தலா ஒரு விக்கெட்டும் பறித்தனர்.

173 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் டாம் கோஹ்லர் தொடக்கம் முதலே ஆட்டத்தை திறம்பட தொடங்கினர். டாம் கோஹ்லர் 15 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

ஜெய்ஸ்வால் 30 பந்துகளில் 8 பவுண்டரிகள் அடித்து 45 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கேப்டன் சஞ்சு சாம்சன் 17 ரன்கள் எடுத்து விக்கெட் இழந்தார். துருவ் ஜூரல் 8 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். ஹெட்மியர் மற்றும் ரியான் பராக் இருவரும் நல்ல கூட்டணி அமைத்து ரன்களை சேர்த்தனர்.

18-வது ஓவரில் முகமது சிராஜ் பந்துவீச, ரியான் பராக் 36 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்த பந்தில் ஹெட்மியர் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியாக ரோவ்மேன் பவல் 10* ரன்னுடன் களத்தில் இருந்தார்.

இந்த வெற்றியின் மூலம், ராஜஸ்தான் அணி 2-வது குவாலிபயர் போட்டியில் ஹைதராபாத் அணியுடன் மோதவுள்ளது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *